Saturday, April 21, 2012

ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!


ஆய கலைகளை அறுபத்து நான்கு வகையாக பிரித்துள்ளனர், அவைகளின் பட்டியல்..

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்
38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்
61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்.
நன்றி http://www.gaanam.net/.
இவையெல்லாம் என்ன கலைகள் என்று ஆராய்ந்து வருகிறேன். தகவல் உள்ளவர்கள் பின்னூட்டம் போடலாம்.

Monday, January 30, 2012

காமெடி

எதாவது எழுதனுமேன்னு சும்மா மோட்டுவளைய பார்த்தப்ப அந்த கன நேரத்தில வந்து உதித்த ஞானோதயம் என்னவென்றால்... இப்போ இருக்கிற சினிமா காமெடி ட்ரென்ட் , நம்ம சக மனுஷனோட பேசறப்போ எப்படி அதோட வேலையை காட்டுது..?? சும்மா "ஓட்டுறது.."., கிண்டல், கேலி யோட அடுத்த வெர்சன். எவனாவது ஒருத்தன் சிக்கிட்டா போதும். அவனை அதல சிதல ஆக்கிடுவானுங்க (அதில் அடிக்கடி சிக்கும் பலியாடு அடியேன் தான்). ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த உரையாடல் முறைக்கும் இப்போ இருக்கும் முறைக்கும் எவ்வளவு வித்யாசம்...??. இப்போ மக்கள் வடிவேலு வசனம், கவுண்டமணி வசனம், சந்தானம் வசனம்.. இது மூனை தாண்டி வேற எது மாதிரியும் பேசுறது இல்ல. இங்க யாரையும் குறை சொல்லல, ஆனா , கருத்தான ஒரு உரையாடல் 'மொக்கை' என்று அழைக்கப்படுவதை நான் தினமும் காண்கிறேன்... இதை பற்றி மேலும் பேசலாம்...

Saturday, January 28, 2012

வணக்கம்

வணக்கம்,
தமிழில் இடுகை பதிவுகள் செய்ய வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை, இப்போது தான் அந்த ஆசையை செயலாக்கம் செய்ய தொடங்கியுள்ளேன். எனக்கு தோன்றும் எண்ணங்களை கொஞ்சம் கூட கூச்சப்படாமல் இங்கே பதிவு செய்ய போகிறேன். போக போக பார்க்கலாம், இப்போதைக்கு அவ்வளவுதான் ...

நன்றி!